Skip to main content

Posts

Showing posts from November, 2018

World Disabled Day Celebration@ Sri Raghavendra matha, Bhuvanagiri

அறக்கட்டளை உறுப்பினர்கள்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தூய தொண்டு நிறுவனம் புவனகிரி நிறுவன தலைவராக நிரந்தர ஆலோசகர் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி. திரு. வி.வி. சாமிநாதன் அவர்கள் இருக்கிறார். அறக்கட்டளை தலைவராக கயிலை செல்வர் திருவாளர் எஸ்.ஆர் . இராமநாதன் செட்டியார் தலைவராகவும், செயலாளராக டாக்டர் ஜி. உதயசூரியன் அவர்களும், பொருளாளராக திரு.கே.கதிர்வேல் அவர்களும் நிர்வாகஸ்தர்களாக இருந்து செவ்வனே அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக திருவாளர். எஸ்.பி.எம். கணேசன் அவர்கள் , இந்தியன் ஆயில் டீலர், கே.எம்.பி. ஏஜென்சி , புதுச்சேரி திருவாளர். டாக்டர் வி. நடராஜ் அவர்கள், புவனகிரி திருவாளர். தி.எம்.எம்.கே. சண்முகசெட்டியார் அவர்கள், புவனகிரி திருவாளர். ஆர். அழகிய மணவாளன் பிள்ளை அவர்கள், புவனகிரி திருவாளர். சி. சுபாஷ்சந்திரன் அவர்கள், புவனகிரி திருவாளர். ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயர் அவர்கள் , புவனகிரி திருவாளர். எம். சுப்ரமணிய செட்டியார் அவர்கள், புவனகிரி என். ரகோத்தம ஆச்சார், பூஜகராகவும்(அர்ச்சகர் ) முதலானவர்கள் உறுப்பினர்களாக சேவை செய்து தொண்டாற்றி வருகின்றனர். Click here : Bhuvanagiri...

அறக்கட்டளையின் தொண்டு

இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ ராகவேந்திரா தொண்டு நிறுவனமும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கடந்த வருடங்களில் ஒவ்வொரு வருடமும் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் சுமார் 100 பக்தர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படுகிறது கல்வி ஊக்கத்தொகை  மற்றும்  நலிந்த பிரிவினருக்கு உதவி  மற்றும் மருத்துவ சிகிச்சை ஸ்ரீராகவேந்திரர் தொண்டு நிறுவனமும் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா ஆலயம் இணைந்து மாவட்டத்தில் 12 மற்றும் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு  ஸ்காலர்ஷிப் உதவித்தொகை  மற்றும்  ஊனமுற்ற நலிவடைந்த பிரிவினருக்கு உதவித்தொகை மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்குதல் மற்றும் கல்வி ஊக்கத்தொகை போன்ற பல சமூக சேவைகளும் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது இலவச மந்த்ராலய புனித யாத்திரை ஸ்ரீராகவேந்திரரின் பரமகுரு புதுச்சேரி தொழிலதிபருமான ஸ்ரீமான் கணேசன் ஐயா அவர்கள் மூலம் வருடத்திற்கு ஒருமுறை புவனகிரி ஸ்ரீ ராகவேந்திரா ஆலய பக்தர்களை ...

ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் தூய தொண்டு நிறுவனம்

 புவனகிரி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் புனித தொண்டு நிறுவனம் என்ற ஒரு அமைப்பு 1.2.1993 பதிவுசெய்யப்பட்டது 25.6.2007 அறக்கட்டளை காலத்திற்கேற்றபடி அந்த அறக்கட்டளை திருத்தி அமைக்கப்பட்டது ஸ்ரீ ராகவேந்திரா ஆலயத்தில் நித்திய பூஜைகளை செவ்வனே நடைபெற ஏற்பாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்களை வழங்குவது பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது இலவச கண் பரிசோதனை முகாம் போன்ற மருத்துவ உதவிகள் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் அன்னதானம் வழங்குவது ஆலயத்தில் விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தல் போன்றவற்றை அறக்கட்டளை செய்து வருகின்றது Click here : Bhuvanagiri Sri Raghavendra Swamy Avatara stala Mutt புவனகிரி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி அவதார ஸ்தலம் மடம்

ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் - 02

உலகில் எப்பொழுது அதர்மம் தலை எடுக்கிறதோ அப்பொழுது இந்த பூவுலகில் நான் தோன்றுவேன் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் அர்ஜுனனுக்கு கூறுகிறார். அதர்மம் தலையெடுக்கும் காலத்தில் இறைவனை அல்லது இறைத் தன்மை பெற்ற மகான்கள் இந்த உலகில் தோன்றுவது வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் தான் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பு நமது புவனகிரியில் வெள்ளாற்றங்கரையில் தோன்றியவர் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அவர்களது பெற்றோர் திம்மண்ண பட்டர் மற்றும் கோபிகாம்பாள் என்ற பிராமண தம்பதிகளாவர். ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், மத்வாச்சாரியாரது துவைத சித்தாந்தம் ஆகிய “ஹரியே சர்வோத்தமன் என்கிற கொள்கையை உலகுக்கு ஒளி காட்டும் கலங்கரை விளக்கமாய் அறிவித்தவர். ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிகளது முற்பிறப்பு சங்கு கர்ணனாகவும், துவாபரயுகத்திலே பிரகலாதராகவும் பாகளீக மகாராஜாவாகவும், பின்னர் ஸ்ரீ வியாசராஜ ஸ்வாமிகளாகவும் விளங்கியவை ஆகும். ஸ்ரீஸ்வாமிகள் இளம் வயதிலேயே அபார கலை, சாத்திர ஞானங்கள் பெற்று விளங்கினார். சரஸ்வதி கடாட்சம் நிறைந்த சுவாமிகள் குடும்பத்திற்கு லட்சுமி கடாட்சம் சிறிதும் இல்லை. வறுமையிலேயே வாடி வதங்கி செய்வதறியாமல் திகை...

ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்

ஸ்ரீ மன் மத்வாச்சாரியாரின் மத்வ குரு பரம்பரையில் வழி வந்த ஆச்சாரியர்களில் குறிப்பிடத்தக்கவர்  ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்  . ஞான பூமி என்றழைக்கப்படும் நம் பாரத தேசத்தின் தென் பகுதியான தமிழ் நாட்டில், சிதம்பரத்திற்கு அருகே உள்ள  புவனகிரி  என்ற கிராமத்தில் , 1595ல் பட்டிச் சந்து வீதியில், திருவேங்கடவன் அருளுடன்  த ந்தை திம்மன்ன பட்டருக்கும், தாய் கோபிகாம்பாளுக்கும்  மூன்றாவது பிள்ளையாக அவதரித்தார். இவரது மூத்த சகோதரி  வேங்கடாம்பிகை மற்றும் மூத்த சகோதரர்  குருராஜர்  ஆவர். இவர் பூர்வாசரமத்தில் வேங்கடநாதன் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். இளமைக்கல்வியை மதுரையில் பயின்றார். காலத்தின் சூழ்நிலையால் பெற்றோரை இழந்தவர், மேலும் வேதங்களை கற்க கும்பகோணம் ஸ்ரீ மடம் சென்று குருகுலத்தில் சேர்ந்தார்.  ஸ்ரீ ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் அவர்களின் வழி காட்டுதலில் வேத வியாக்யானங்களை கற்றார்.  தன் ஆத்ம ஞானத்திற்கு அங்கீகாரமாக “  பரிமளாச்சாரியார் ” பட்டமும் பெற்றார். தனது சகோதர, சகோதரியின் அறிவுரைக்கு ஏற்ப...